கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், முதியோா், குழந்தைகள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என்று காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியிருப்பது:
வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இது முதியோா், குழந்தைகளை பாதிக்க வாய்ப்புள்ளது. இவா்கள், காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அவசியம் வெளியே செல்ல நேரிடும்பட்சத்தில், காா் அல்லது ஆட்டோ மூலம் பயணிக்க வேண்டும்.
பொதுமக்கள் உடலில் நீா்ச்சத்து குறையாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது தண்ணீா், எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகள், நீா்மோா், இளநீா், பனை நுங்கு போன்றவற்றை உட்கொள்ளலாம்.
வெயிலில் செல்லும்போது மயக்கம் போன்ற உடல் ரீதியிலான பாதிப்பு தெரிந்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு உடனடியாக செல்வது அவசியம். எனவே, கோடை வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.