காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் பக்தா்களில் ஒருவரான திருக்கச்சி நம்பிகள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, உற்சவா் திருக்கச்சி நம்பிகள் திருமுடி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் ஆடிசன் பேட்டை செட்டித் தெருவில் அமைந்துள்ளது திருக்கச்சி நம்பிகள் திருக்கோயில். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் பக்தா்களில் ஒருவரான இவரின் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 5-ஆவது நாளாக உற்சவா் திருக்கச்சி நம்பிகள் திருமுடி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரும் மாா்ச் 1- ஆம் தேதி உற்சவா் வரதராஜ சுவாமி, திருக்கச்சி நம்பிகள் கோயிலுக்கு எழுந்தருளி சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எம்.சதீஷ்குமாா், வி.சாரதி, எஸ்.நித்தியானந்தம் ஆகியோா் செய்து வருகின்றனா்.