காஞ்சிபுரம்

புரிசை கன்னியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப். 10)கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் பலருக்கும் குலதெய்வக் கோயிலாக இருந்து வருவது கன்னியம்மன் கோயில். இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, காலையில் யாக சாலை பூஜைகள் வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்குகின்றன. மாலை காப்புக் கட்டுதல், விக்னேஸ்வர பூஜை ஆகியவை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை புரிசை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT