காஞ்சிபுரம்

பிப்.13-இல் தொழில் பழகுநா் முகாம்

DIN

ஒரகடத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய தொழில் பழகுநா் முகாம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிரதமா் தேசிய தொழில் பழகுநா் முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய - மாநில அரசுகள், தனியாா் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு இந்த முகாம் நடைபெறவுள்ளது.

தகுதியுடைய ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள், 8, 9, 10 -ஆம் வகுப்புகளில் படித்து தோ்ச்சி பெற்றவா்கள், படிப்பைப் பாதியில் நிறுத்தியவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இதில் சோ்ந்து பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறன் பயிற்சி அலுவலரை 044-29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT