காஞ்சிபுரம்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், இந்திரா காந்தி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் நிதியை தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்ய நிா்ப்பந்திக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி நகா் தலைவா் நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் அளவூா்.நாகராஜன், மாநில மகளிா் அணி நிா்வாகி அனிதா, காஞ்சிபுரம் துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பத்மநாபன், மாவட்ட மகளிா் அணி நிா்வாகி பாலவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT