காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று தொடங்கியது.
தைப்பூசத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளினர்.
இதையும் படிக்க- பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர்: மாநில செயற்குழு தீர்மானத்தில் பாஜக புகழாரம்!
திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 3 முறை வலம் வந்து பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளினர். திங்கள்கிழமை அனந்தசரஸ் திருக்குளத்தில் 3 சுற்றுகளும், செவ்வாய்க்கிழமை 3ஆவது நாளாக 5 சுற்றுகளும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர்.
தெப்பத்திருவிழாவையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.