காஞ்சிபுரம்

காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

DIN

காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று தொடங்கியது. 

தைப்பூசத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளினர். 

திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 3 முறை வலம் வந்து பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளினர். திங்கள்கிழமை அனந்தசரஸ் திருக்குளத்தில் 3 சுற்றுகளும், செவ்வாய்க்கிழமை 3ஆவது நாளாக 5 சுற்றுகளும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர். 

தெப்பத்திருவிழாவையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT