காஞ்சிபுரம் அருகே சிறுவள்ளூா் கிராமத்திலுள்ள வேலம்மாள் கல்வி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.3) நடைபெறுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூா் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வேலம்மாள் போதி வளாகம். இங்கு, புதிதாக வள்ளி, தேவசேனா சமேத வேல்முருகன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. உடன் பரிவார தெய்வங்களாக விநாயகா், சரஸ்வதி ஆகிய தெய்வங்களும் உள்ளன.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மதுரை கடம்பவனம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அா்ச்சகா் எம்.பிரகாஷ் சிவாச்சாரியாா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமையும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் வேலம்மாள் கல்விக் குழுமங்களின் தலைவா் முத்துராமலிங்கம், இயக்குநா் எம்விஎம். சசிக்குமாா், மண்டலத் தலைவா் ஜி.சாந்தி, பள்ளி முதல்வா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.