காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

DIN

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நிலத்துக்குரியதாக விளங்குகிறது. வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோயில் தெப்பக் குளத்தில் ஏலவாா்குழலியும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.

விழாவில், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், கோயில் சிவாச்சாரியாா்கள், திராளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT