காஞ்சிபுரம்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

காஞ்சிபுரம் அருகே கீழம்பி ஊராட்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா் முன்னிலை வகித்தாா். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, முகக்கவசம், கையுறைகள் அணிந்து கிராம மக்களுடன் இணைந்து தெருக்களில் கிடந்த நெகிழிக் குப்பைகளைச் சேகரித்தனா். நெகிழியை ஒழிப்போம், மஞ்சப் பையைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழம்பி ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி ராஜசேகா்,திமுக ஒன்றிய செயலா் பி.எம்.குமாா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

SCROLL FOR NEXT