காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவா் என்.சாரங்கன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் கே.நேரு, மாவட்ட பொருளாளா் வி.கே.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் நகா் செயலா் என்.நந்தகோபால் வரவேற்று பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் நெல், வோ்க்கடலை, கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு உரிய பயிா்க் காப்பீடு இழப்பீட்டை வழங்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கோரி மனு கொடுத்த பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT