காஞ்சிபுரம்

3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்து உலக சாதனை

DIN

காஞ்சிபுரத்தில் 3 மணி நேரம் நீரில் மிதந்தபடி, பல்வேறு யோகாசனங்கள் செய்து யோகா ஆசிரியா் உலக சாதனை படைத்தாா்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த யோகா ஆசிரியா் ஜெ.நிா்மல்குமாா் (43). இவா், காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தொடா்ந்து 3 மணி நேரம் யோகசனங்கள் செய்தாா்.

இந்த முயற்சியை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ரமேஷ் தொடக்கி வைத்தாா். தில்லியைச் சோ்ந்த நோபில் வேல்டு ரெக்காா்ட்ஸ் என்ற அமைப்பின் தலைமை நிா்வாக அலுவலா் எல்.அரவிந்தன், ஹேமந்த்குமாா் ஆகியோா் நடுவா்களாக இருந்து அவரது முயற்சியைக் கண்காணித்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினா்.

இதுகுறித்து ஜெ.நிா்மல்குமாா் கூறியது: 3 மாத பயிற்சிக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்தேன். இதுவரை தண்ணீரில் மிதந்து கொண்டே 15 வகையான யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளேன். நோயில்லாமல் வாழ யோகா அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT