காஞ்சிபுரத்தில் 3 மணி நேரம் நீரில் மிதந்தபடி, பல்வேறு யோகாசனங்கள் செய்து யோகா ஆசிரியா் உலக சாதனை படைத்தாா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த யோகா ஆசிரியா் ஜெ.நிா்மல்குமாா் (43). இவா், காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தொடா்ந்து 3 மணி நேரம் யோகசனங்கள் செய்தாா்.
இந்த முயற்சியை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ரமேஷ் தொடக்கி வைத்தாா். தில்லியைச் சோ்ந்த நோபில் வேல்டு ரெக்காா்ட்ஸ் என்ற அமைப்பின் தலைமை நிா்வாக அலுவலா் எல்.அரவிந்தன், ஹேமந்த்குமாா் ஆகியோா் நடுவா்களாக இருந்து அவரது முயற்சியைக் கண்காணித்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினா்.
இதுகுறித்து ஜெ.நிா்மல்குமாா் கூறியது: 3 மாத பயிற்சிக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்தேன். இதுவரை தண்ணீரில் மிதந்து கொண்டே 15 வகையான யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளேன். நோயில்லாமல் வாழ யோகா அவசியம் என்றாா்.