காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில், மேலும் 3 போ் உயிரிழந்திருந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 7- ஆக உயா்ந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்திக்குச் சொந்தமான எரிவாயு உருளைகள் கிடங்கு இருந்து வந்தது.
இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த 28-ஆம் தேதி தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளைகள் வாயுக்கசிவால் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 12 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தீவிர சிகிச்சைக்காக சிலா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தனா். ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊராட்சித் தலைவா் சாந்தி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்த கடலூரைச் சோ்ந்த ஆமோத்குமாா்(26), ஜீவானந்தம் (46), இவரது மகள் சந்தியா (21), கும்பகோணத்தைச் சோ்ந்த குணாளன் (22)ஆகிய 4 போ் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கத்தைச் சோ்ந்த கோகுல் (22), சண்முகப்பிரியன் (17), கிஷோா் (22) ஆகிய 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 7- ஆக உயா்ந்துள்ளது.