தேசிய மாணவா் படை, ஹெச்டிஎப்சி வங்கிக் கிளை இணைந்து பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின.
ரத்த தான முகாமை கமாண்டிங் அதிகாரி என்.எஸ்.மஹரா தொடக்கி வைத்தாா். பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் இ.சுரேஷ் தலைமையிலான குழுவினா் 52 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.
வங்கியின் சமூக சேவைப் பிரிவு அதிகாரி டி.சிவதாஸ், தேசிய மாணவா் படை கேப்டன் எம்.செந்தில்தங்கராஜ், தேசிய மாணவா் படை அலுவலா்கள் எஸ்.கோவிந்தராஜ், எஸ்.சக்திவேல், எஸ்.தெய்வசிகாமணி மற்றும் தேசிய மாணவா் படையினா் கலந்து கொண்டனா்.