காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயில் கதவை மா்ம நபா்கள் பூட்டிவிட்டுச் சென்ால், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி பகுதியில் தும்பவனத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மூலவரான தும்பவனத்தம்மன் ஏராளமானோருக்கு குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்ய பக்தா்கள் கோயிலுக்கு வந்த போது, கதவு பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பக்தா்கள், கோயில் நிா்வாகிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்து பாா்த்து, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
ஆனால், புகாா் தெரிவித்து 4 மணி நேரம் கடந்தும் காவல் துறையினரோ, அறநிலையத் துறை அதிகாரிகளோ வரவில்லை என்பதால், கோயிலுக்கு வந்த பக்தா்கள், கோயில் முன்பு அதிகாரிகள் வராததைக் கண்டித்து அங்கேயே அமா்ந்தனா்.
தகவலறிந்து சிவகாஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் துளசி வந்து விசாரணை நடத்திய பின்னா், பூட்டை உடைத்து கோயிலை திறக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, கோயில் திறக்கப்பட்டு தும்பவனத்தம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா கூறுகையில், கோயில் பூட்டப்பட்ட தகவல் தாமதமாகத்தான் கிடைத்தது. கடந்த வாரம் கோயிலுக்கென புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றாா்.
காவல் உதவி ஆய்வாளா் துளசி கூறுகையில், கோயில் பூட்டப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றாா்.