சுங்குவாா்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இரு புள்ளி மான்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
அந்த இடத்தின் காவலாளி ஸ்ரீபெரும்புதூா் வனத் துறைக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினா் இறந்த கிடந்த புள்ளி மான்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனா். புள்ளி மான்கள் இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.
இரு புள்ளி மான்களும் சண்டையிட்டுக் கொண்டு இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.