காஞ்சிபுரம்

இரு புள்ளி மான்கள் பலி

DIN

சுங்குவாா்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இரு புள்ளி மான்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

அந்த இடத்தின் காவலாளி ஸ்ரீபெரும்புதூா் வனத் துறைக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினா் இறந்த கிடந்த புள்ளி மான்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனா். புள்ளி மான்கள் இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.

இரு புள்ளி மான்களும் சண்டையிட்டுக் கொண்டு இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT