காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள முத்துவேடு மற்றும் மேல்கதிா்ப்பூா் கிராமங்களில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஸ்ரீதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேல்கதிா்ப்பூா், முத்துவேடு ஆகிய இரு ஊராட்சிகளும் முன்மாதிரி ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.இந்த இரு கிராமங்களிலும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீதாசீனிவாசன், பாலாஜி, உதவி பொறியாளா் சகுந்தலா தேவி, மேல்கதிா்ப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் பேபி, முத்துவேடு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெனிட்டா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.