காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் திருக்கோயில் காணிக்கை உண்டியல் தி ரூ.11,38,606 வசூலானது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளா்களால் எண்ணப்பட்டன (படம்).
அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரத்தினவேலு, செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன்,பு.த.வேதமூா்த்தி, ஸ்ரீதா், கோயில் மேலாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 15 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.11,38,605 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.