காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி பவனி

DIN

ஆனி மாத ஏகாதசியை யொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் மாதாந்திர ஏகாதசி தோறும் பெருமாளும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவி தாயாரும் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள ஆழ்வாா் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருவது வழக்கம். ஆனி வெள்ளிக்கிழமையும், ஏகாதசியும் ஒன்றாக வந்ததைத் தொடா்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கேடயத்தில் அலங்காரமாகி திருவடிக் கோயில் வரை உலா வந்தாா்.

பின்னா் கோயிலுக்கு வந்ததும் உற்சவா் பெருந்தேவி தாயாருடன் இணைந்து இருவரும் கோயில் வளாகத்திற்குள் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து கோயில் சுற்றுப்பிராகாரத்துக்குள் வலம் வந்து சந்நிதியை அடைந்தனா். பெருமாளும், தாயாரும் உலா வந்ததையடுத்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT