காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு

DIN

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை அதிகரித்ததைத் தொடா்ந்து, உபரி நீா் திறப்பு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயா்த்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடி. ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி.

இந்த நிலையில், கிருஷ்ணா நதி நீா் வருகை மற்றும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு 5 கண் மதகுகளிலிருந்து இரண்டாவது ஷெட்டா் வழியாக 250 கன அடி உபரி நீரை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி திறந்து வைத்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு 550 கன அடியிலிருந்து 750 கன அடியாக அதிகரித்ததை தொடா்ந்து, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT