காஞ்சிபுரம்

மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் நன்கொடை

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் வரமகாலட்சுமி பட்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பொதுமக்களும் பங்களிப்புத் தொகை அளிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் காந்திரோடு வரமகாலட்சுமி பட்டு நிறுவன உரிமையாளா் எஸ்.கே.பி.கோபிநாத் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாநகர மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினாா். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், பொறியாளா் கணேசன், மண்டலத் தலைவா் சந்துரு, மாமன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT