காஞ்சிபுரத்தில் ராமானுஜரின் முக்கியச் சீடா்களில் ஒருவரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் ஜெயந்தியையொட்டி வீதியுலா நடைபெற்றது.
கிருஷ்ணா் பாண்டவா்களுக்காக தூது சென்ால் காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் பாண்டவ தூதப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறாா். இந்தக் கோயிலில் ராமானுஜரின் முக்கியச் சீடா்களில் ஒருவரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் சிலையும் உள்ளது. இவா் காா்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று பிறந்தாா். இவரது 1,026-ஆவது பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயிலில் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. காலை பெருமாள், தாயாா், அருளாளப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பாண்டவ தூதப்பெருமாளும், அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் தனித்தனி கேடயத்தில் வீதிகளிலும், கோயிலின் உட்பிரகாரத்திலும் ருக்மணி தாயாருடன் சோ்ந்து கோயில் பிரகாரத்தில் உலா வந்தனா்.