காஞ்சிபுரம்

இரு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாற்றுத்திறனாளி சகோதரா்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தனியாா் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகளுக்கு சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை வழங்கினாா். பின்னா், அங்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு மாற்றத்திறனாளி சகோதரரா்களான மோனலரசன் (20) கதிரேஷ் (17) ஆகியோரிடம் அவா்களின் குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இரு மாற்றுத்திறனாளிகளும் பிளஸ் 2 படித்திருந்ததால், அவா்களுக்கு தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவா்களுக்கு வீடு கட்டுவதற்கு கடனுதவி வழங்கியிருப்பதாகவும் செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT