காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் சக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு புதிதாக உற்சவா் சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் வாங்கப்பட்டிருந்தன. இந்த உற்சவா் சிலைகளுக்கென காலையில் பல்வேறு ஹோமங்கள், கோபூஜை, லட்சுமி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடா்ந்து மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்.கணபதி குருக்கள் ஆகம விதிகளின்படி மாங்கல்யம் சூட்டினாா். பின்னா் வள்ளி,தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி கேடயத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எஸ்.வேணுகோபால் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா். படிபூஜை விழாக் குழு தலைவா் எஸ்.ரத்தினவேல், படவேட்டம்மன் கோயில் அறங்காவலா் எம்.ஜி.வடிவேல், கைச்சிலம்பாட்ட கலைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.மணிவண்ணன், பொறியாளா் வி. அரிவேங்கடம் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.