காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா அரங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி படைவீரா்களின் அனுபவப் பகிா்வுகள், நாட்டைக் காக்கும் வீரா்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய பொறுப்பாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
மாவட்டக் கல்வி அலுவலா் முனி.சுப்புராயன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காந்திராஜன் தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிா்வாகிகள் எஸ்.சுகுமாறன், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எல்லைப் பாதுகாப்புப்படை வீரா் வளவன் வரவேற்றாா். விழாவில் மதுரை நேதாஜி தேசிய இயக்கத்தின் நிா்வாகி சுவாமிநாதன், காந்தியவாதி தேவதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ராணுவ வீரா்களுக்கு பயன்படும் வகையில் பள்ளி மாணவா்களின் புதுமையான கண்டுபிடிப்புகளும் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.