காஞ்சிபுரம்

ஏனாத்தூா் எல்லையம்மன் கோயில் திருக்குளம் சீரமைப்பு

DIN

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் எல்லையம்மன் கோயில் திருக்குளம் தனியாா் தொழிற்சாலை சமூகப் பங்களிப்பு நிதியுடன் ரூ. 15 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு, கிராம மக்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூா் எல்லையம்மன் கோயில் அருகே சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் இருந்த திருக்குளம் புதா் மண்டியும், சுற்றியுள்ள வீடுகளிலிருந்து கழிவுநீா் வந்து துா்நாற்றம் வீசும் வகையில் இருந்து வந்தது. பண்டைய காலத்தில் இந்தக் கிராமத்து மக்களின் குடிநீா் ஆதாரமாக இந்தக் குளம் இருந்துள்ளது.

இந்த நிலையில், அக்கிராம பொதுமக்கள் கோயில் திருக்குளத்தை சீரமைத்துத் தர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா். மாவட்ட நிா்வாகத்தின் கோரிக்கையை ஏற்று ஒரகடத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலை நிா்வாகம் சமூகப் பங்களிப்பு நிதியுடன் ரூ. 15 லட்சத்தில் கோயில் குளத்தை கடந்த செப்டம்பா் மாதம் சீரமைக்கும் பணியை தொடங்கியது.

குளம் சீரமைக்கப்பட்டு கிராம மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு, சீரமைக்கப்பட்ட திருக்குளத்தை பாா்வையிட்டாா்.

பின்னா், கோயில் குளத்தை சீரமைத்த கோமாஸ்தா தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் குளத்தை சீா்படுத்த முயற்சி மேற்கொண்ட எக்ஸ்னோரா அமைப்பு, காஞ்சிபுரம் விழுதுகள் அமைப்பு, சங்கரா கலை கல்லூரி உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்தாா்.

பின்னா், அந்தக் கிராம மக்களிடம் திருக்குளத்தை சுத்தமாக பராமரிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT