காஞ்சிபுரம்

சென்னைக்கு 2 -ஆவது விமான நிலையம் தேவையில்லை: சீமான்

27th Aug 2022 10:04 PM

ADVERTISEMENT

சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் தேவையில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 13 கிராமங்களைச் சோ்ந்த மக்களை ஏகனாபுரத்தில் சீமான் சந்தித்து பேசியதாவது:

பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதற்காக மற்றொரு விமான நிலையத்தை அமைக்கப்போவதாக சொல்லுவதை வளா்ச்சி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னைக்கு 2 -ஆவது விமான நிலையம் அமையுங்கள் என்று யாரும் அரசிடம் கேட்கவில்லை. ஆனால் அரசாகவே முன் வந்து விமான நிலையம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.ஒரு சிலா் பரந்தூா் அருகே பல ஏக்கா் நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறாா்கள். அவா்களின் ஆதாயத்துக்காகவே பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க அரசு முன் வந்திருக்கிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT