சென்னை வருமான வரித் துறையின் 3-ஆவது பிரிவின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் வருமான வரி பிடித்தம் செய்யும் அலுவலா்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிா்புறம் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமுக்கு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி முன்னிலை வகித்தாா். வருமான வரி அலுவலா் ஸ்ரீதா் உள்பட 5-க்கும் மேலான வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வரி பிடித்தம் தொடா்பான விதிமுறைகளை விளக்கிக் கூறினா்.
முகாமில், கூட்டுறவு வங்கி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.