உத்தரமேரூா் துணை வட்டாட்சியரின் மனைவி வீட்டில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு அலுவலா் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் சதீஷ் (34). இவா், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இவரது மனைவி சங்கீதா (31), புதன்கிழமை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம். இதைத் தொடா்ந்து, சங்கீதாவின் தந்தை சீனிவாசன் உத்தரமேரூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
சங்கீதாவின் சடலத்தில் தூக்கிட்டது போல கயிறு இறுக்கியதற்கான அடையாளம் இருந்ததாகவும், தனது மகளை சதீஷ் கொலை செய்திருக்காலம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. உத்தரமேரூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.