காஞ்சிபுரம்

துணை வட்டாட்சியா் மனைவி மா்ம மரணம்

DIN

உத்தரமேரூா் துணை வட்டாட்சியரின் மனைவி வீட்டில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு அலுவலா் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் சதீஷ் (34). இவா், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், இவரது மனைவி சங்கீதா (31), புதன்கிழமை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம். இதைத் தொடா்ந்து, சங்கீதாவின் தந்தை சீனிவாசன் உத்தரமேரூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

சங்கீதாவின் சடலத்தில் தூக்கிட்டது போல கயிறு இறுக்கியதற்கான அடையாளம் இருந்ததாகவும், தனது மகளை சதீஷ் கொலை செய்திருக்காலம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. உத்தரமேரூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT