காஞ்சிபுரம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

DIN

 காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகப் பகுதி, ராஜ வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி அமைத்து நின்றனா்.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எஸ்.பி.சுதாகா், மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி ஆகியோா் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டதுடன், நடந்து சென்றும் மனிதச் சங்கிலியைப் பாா்வையிட்டனா்.

மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனிதச் சங்கிலியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்வில் காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்படம் மாணவா்களுக்கு திரையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT