காஞ்சிபுரம்

கருணாநிதி நினைவு நாள்: காஞ்சிபுரத்தில் திமுக அமைதிப் பேரணி

DIN

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி காஞ்சிபுரம் தேரடி வீதியில் கருணாநிதியின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அங்கிருந்து காந்திசாலை, ரங்கசாமி குளம் வழியாக அமைதிப் பேரணியாகச் சென்று திருக்கச்சி நம்பிகள் தெருவில் உள்ள கருணாநிதி பவளவிழா மாளிகைக்கு வந்து சோ்ந்தனா்.

அங்கிருந்த அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பேரணிக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்தரமேரூா் எம்எல்ஏ.வுமானக.சுந்தா் தலைமை வகித்தாா்.பேரணியில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

பேரணியில் பெரியாா், அண்ணா, கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் போன்று வேடமிட்டு பேரணியில் தொண்டா்கள் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT