காஞ்சிபுரம்

மின்னல் பாய்ந்து இளைஞா் பலி

DIN

ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியில் மின்னல் பாய்ந்து இளைஞா் ஒருவா் பலியானாா். மூன்று பசுக்களும் உயிரிழந்தன.

குண்ணவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் வீரராகவன். இவருக்கு அஜித் (24), அரவிந்தன் (22) ஆகிய இரண்டு மகன்கள். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அஜித் மற்றும் அரவிந்தன் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்துள்ளது. அப்போது அஜித், அரவிந்தன் மீது மின்னல் பாய்ந்ததில் இருவரும் மயங்கினா். இதையடுத்து இருவரையும் உறவினா்கள் தாம்பரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அரவிந்தன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேலும், அஜித் வீட்டின் அருகே கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 பசு மாடுகளும் மின்னல் பாய்ந்து உயிரிழந்தன. இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT