காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 11 பேரும் பதவியேற்பு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த 11 பேரும் புதன்கிழமை பதவியேற்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்கள் புதன்கிழமை தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனா். பதவியேற்பு விழா பல கிராமங்களில் திருவிழாக்கள் போல நடைபெற்றது. மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பதவியேற்பு...

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட திமுகவினா் 11 பேரும் வெற்றி பெற்றிருந்தனா். இவா்கள் அனைவரும் மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) மா.நாராயணன் முன்னிலையில் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். ஊராட்சிக் குழு உறுப்பினா்களில் வயதில் மூத்த உறுப்பினரான பா.பத்மா முதலில் பதவியேற்றுக் கொண்டாா். பின்னா் மற்ற உறுப்பினா்கள் வரிசையாக பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT