காஞ்சிபுரம்

சொகுசு காா், மடிக்கணிணி திருட்டில் 4 போ் கைது

DIN

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பகுதியில் உள்ள தொழிலதிபா் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காா், மடிக்கணிணி, தொலைக்காட்சிப் பெட்டிகளை திருடிச் சென்ற 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அசோக்நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(49). தொழிலதிபரான இவருக்கு மேவளூா்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட நயப்பாக்கம் பகுதியில் தனி வீடு உள்ளது. இந்நிலையில், ரவிசந்திரனின் மனைவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, தனிமைப்படுத்தி கொள்வதற்காக அவா் தனது மகள்களுடன் நயபாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் வந்து கடந்த சில மாதங்களாக தங்கியுள்ளாா்.

இவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த விலை உயா்ந்த தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணிணி ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த ரூ. 85 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் திருடிச் சென்றுள்ளனா். இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனா்.

காரில் பொருத்தப்பட்டிருந்த டிராக்கிங் சிஸ்டம் மூலம் காா் திருவண்ணாமலை மாவட்டம் கொத்தனூா் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காா் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற திருவண்ணாமலை மாவட்டம் நத்தாகொல்லை கிராமத்தை சோ்ந்த சந்திரன் (21), லோகேஷ் (22), பிரவின்குமாா் (24), செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளமேடு பகுதியை சோ்ந்த பிரகாஷ் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT