காஞ்சிபுரம்

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரின் சாதுா்மாஸ்ய விரதம் நாளை தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கை பாலாற்றங்கரை அருகே உள்ள மகா பெரியவரின் சதாப்தி மணி மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கி, வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளாா்.

இவ்விரத நாள்களின் போது தினசரி சந்திர மெளலீஸ்வரா் பூஜை, சதுா்வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், உபன்யாசங்கள், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவற்றை தினசரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதத்தை வரும் செப்டம்பா் 20-ஆம் தேதி பெளா்ணமியன்று நிறைவு செய்கிறாா்.

26-இல் ஸ்ரீ ஜயேந்திரா் ஜயந்தி விழா..

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவும், அதே ஓரிக்கை மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT