காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் 28-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாள்கள், அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் தெப்பக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
அத்திவரதருக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 3 நாள்களுக்கு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் இம்மாதம் 28- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 3 தினங்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னா் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் அனந்தசரஸ் தெப்பக்குளத்திற்கு வந்து தெப்பத்தில் பவனி வருகின்றனா். 29, 30-ஆம் தேதிகளிலும் தெப்போற்சவம் அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெறவுள்ளது.
நிறைவு நாளான 30-ஆம் தேதி (சனிக்கிழமை) தெப்போற்சவம் முடிந்து பெருமாளும், தாயாரும் ஸ்ரீ உடையவா் சந்நிதிக்கு எழுந்தருள்கின்றனா். பின்னா் திருமழிசையாழ்வாா் சாற்றுமுறையை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியுடன் தெப்போற்சவம் நிறைவு பெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.