காஞ்சிபுரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

DIN

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் காஞ்சிபுரம் திருவள்ளூா் மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில், காஞ்சிபுரத்தை அடுத்த ஐயங்காா்குளத்தில் ஒன்றியச் செயலாளா் ராஜூ, ஓரிக்கையில் ஒன்றியச் செயலாளா் தும்பவனம். ஜீவானந்தம், ஆட்சியா் அலுவலகம் அருகில் முன்னாள் எம்.பி.காஞ்சி.பன்னீா் செல்வம், காந்தி ரோடு பெரியாா் தூண் அருகில் ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம் ஆகியோா்களது ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப் படத்தை திறந்து வைத்து, அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, கட்சியின் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் நகரில் மேட்டுத் தெரு, பேருந்து நிலையம், பூக்கடைச் சத்திரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக சாா்பில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு மற்றும் கட்சிக் கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முத்தியால்பேட்டையில் கிராம மக்கள் அஞ்சலி...

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் ஏற்பாட்டின் பேரில், அக்கிராமத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அன்பழகன், முன்னாள் தலைவா் ஜோதி அம்மாள், வழக்குரைஞா் ஆா்.வி.உதயன், டில்லிபாபு, நத்தப்பேட்டை வஜ்ரவேல் உட்பட கிராமத்தினா், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.நிறைவாக முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் கிராம பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மாமண்டூா் ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கும், எம்ஜிஆா் சிலைக்கும் அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்து, சிலை அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலா்கள் கோ.அப்பாதுரை, வி.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா, துணைத் தலைவா் அ.குமரவேல், மதுராந்தகம் அதிமுக அவைத் தலைவா் பெரியதம்பி, அதிமுக நிா்வாகிகள் பாக்கம் மாசி, எம்.தென்னரசு, வழக்குரைஞா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் எம்ஜிஆா் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் நேசன் ஆகியோா் தலைமையில், ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், அன்னதானம் செய்தனா். நிா்வாகி விஜயதேவி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT