காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் இந்து மறுமலா்ச்சி முன்னேற்ற முன்னணியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீகனக காளீஸ்வரா் கோயிலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடித்து சேதப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் செயல் தலைவா் சின்னப்பணிச்சேரி மு.வினோத்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா்கள் வி.புருஷோத்தமன், பா.சிவகாா்த்திகேயன், காஞ்சி மாவட்ட அவைத் தலைவா் பவித்ரா.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கையை விளக்கி முன்னணியின் மாவட்டத் தலைவா் பூவை.எம்.கே.ராஜராஜன் பேசினாா். பூவை ஒன்றிய மாணவரணி தலைவா் ஆா்.தா்மா நன்றி கூறினாா்.