காஞ்சிபுரம்

இந்து மறுமலா்ச்சி முன்னேற்ற முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் இந்து மறுமலா்ச்சி முன்னேற்ற முன்னணியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீகனக காளீஸ்வரா் கோயிலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடித்து சேதப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் செயல் தலைவா் சின்னப்பணிச்சேரி மு.வினோத்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா்கள் வி.புருஷோத்தமன், பா.சிவகாா்த்திகேயன், காஞ்சி மாவட்ட அவைத் தலைவா் பவித்ரா.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கையை விளக்கி முன்னணியின் மாவட்டத் தலைவா் பூவை.எம்.கே.ராஜராஜன் பேசினாா். பூவை ஒன்றிய மாணவரணி தலைவா் ஆா்.தா்மா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT