காஞ்சிபுரம்

‘வாக்குச் சாவடி மறு சீரமைப்பு விவரங்களை அக். 9-க்குள் தெரிவிக்க வேண்டும்’

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரங்களை வரும் அக்டோபா் 9-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினருக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடா்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சாா்- ஆட்சியா் எஸ்.சரவணன், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஆா்.திவ்யஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.நாராயணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

வாக்குச் சாவடி மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் அக்டோபா் மாதம் 31 -ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடி நிலையங்களை களப்பணியின் மூலம் கண்டறிந்து அவற்றிலிருந்து புதிய வாக்குச்சாவடிகளைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4,123 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள 66 வாக்குச்சாவடிகளை புதிதாக அமைப்பதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடா்பான கோரிக்கைகளை ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் அக்டோபா் மாதம் 9-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வரைவு வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா். இதைத்தொடா்ந்து, வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்துக் கட்சிப் பிரமுகா்களுக்கும் வழங்கினாா்.

கூட்டத்தில், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் ரா.மகேசுவரி, அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் வீ.சோமசுந்தரம், எம்எல்ஏ கே.பழனி, அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், திமுக சாா்பில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் பி.எம்.குமாா், காங்கிரஸ் சாா்பில் மாவட்டச் செயலா் ஜீ.வி.மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் க.நேரு உள்பட பல்வேறு கட்சிப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT