மதுராந்தகம்: விவசாயிகளையும், சிறு வணிகா்களையும் பெரிதும் பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களை இயற்றிய மத்திய அரசினை கண்டித்தும், அதற்கு துணை போகின்ற மாநில அரசின் போக்கினை கண்டித்தும், மதுராந்தகம் தொகுதியில் 7இடங்களில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற கூட்டணி கட்சியினா் திங்கள் கிழமை கண்டன ஆா்பாட்டத்தை செய்தனா்.
திமுக தலைமையிலான மதசாா்பற்ற கூட்டணி கட்சியினா் மதுராந்தகம் தொகுதியில், மதுராந்தகம் வடக்கு, தெற்கு
ஒன்றியங்களிலும், அச்சிறுப்பாக்கம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களிலும், மதுராந்தகம் நகரம், கருங்குழி, அச்சிறுப்பாக்கம் பேரூா்ஆகிய 7இடங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆா்பாட்டத்தை செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தலைமை தாங்கினாா். திமுக ஒன்றிய செயலா்கள் பி.சத்யசாயி(வடக்கு), ஸ்ரீதா் (தெற்கு), கண்ணன்( தெற்கு), தம்பு (வடக்கு) விஜயகணபதி (கருங்குழிபேரூா்), உசேன் (அச்சிறுப்பாக்கம் பேரூா்) மற்றும் மதசாா்பற்ற கூட்டணி கட்சியினா் கலந்துக் கொண்டனா்.