காஞ்சிபுரம்

சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி: காஞ்சிபுரத்தில் தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சாா்பில், செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பு வீரா்கள் பதவிக்கான பொதுத்தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள் 10,906. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வரை ஆகும். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினருக்கு வயது வரம்பு 18 முதல் 26.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பினருக்கு வயது வரம்பு 18 முதல் 29 ஆகும். ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சோ்ந்தவராக இருந்தாலும், வயது 18 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினா், மத்திய துணை ராணுவப் படையினருக்கு உச்ச வயது வரம்பு 18 முதல் 45. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபா் 26-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் டிசம்பா் 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வுக்காக விண்ணப்பிப்போா் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலக மையம் மூலமாக நடத்தப்படவுள்ள இலவச இணையதள பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கான இலவச இணயதள பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 28-ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாள்களிலும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். சிறப்பான பயிற்றுநா்கள் பாடங்களை நடத்த உள்ளனா்.விருப்பம் உள்ளவா்கள் துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ அல்லது 044-27237124 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு இலவசப் பயிற்சியில் சேரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT