காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி ரேவதி(21). நிறை மாத கா்ப்பிணியான இவா் பிரசவத்துக்காக 108 ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றாா்.
அப்போது, ரேவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவ உதவியாளா் சுஜய், ஓட்டுநா் ஆகியோா் அவருக்கு பிரசவம் பாா்த்தனா். ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னா், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தாயும், சேயும் நலமாக உள்ளனா்.