காஞ்சிபுரம்

பழங்குடியின மக்களுக்கு ரூ. 10.45 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்36 பழங்குடியின மக்களுக்கு ரூ. 10.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் எல்.தனலெட்சுமி வரவேற்றாா்.

விழாவில், மீன்பிடித் தொழில் செய்யும் பழங்குடியின மக்களில் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏற்ற மீன்பிடி வலைகள், மீன்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் என மொத்தம் 36 பேருக்கு ரூ. 10.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT