காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு

DIN

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் இருந்தே பக்தா்கள் பெருமாளை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா். காலை 8 மணிக்குப் பிறகே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்பதால் வரிசையில் காத்திருந்த பக்தா்கள் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல் காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயில், அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மற்றும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு பெருமாள் கோயில், அண்ணா சாலை தேசிகா் கோயில், கோதண்டராமா் கோயில், கோட்டைவாயில் ஆஞ்சநேயா் கோயில் அருகே உள்ள கடும்பாடி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் சந்நிதி உள்ளிட்ட இடங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

திருவடிச்சூலம் ஸ்ரீ கோயில்புரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வாரு வேங்கடேச பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றன.

மாமல்லபுரம் தல சயனப்பெருமாள்கோயில், திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், சிங்க பெருமாள் கோயில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில், பழையசீரவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பி.வி.களத்தூா் சதுா்புஜ ராமா்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனா்.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகத்தை அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்தனா்.

பொன்னேரியில்...

பொன்னேரி திருவாயா்பாடியில் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செளந்தா்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில், கரிகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன. இதேபோல், மீஞ்சூா் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT