காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திங்கள்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
தீயணைப்பு வீரா்கள் 53 போ் பங்கேற்ற இப்பேரணியை, மாவட்ட தீயணைப்பு அலுவலா் க.குமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் சுற்றிவந்து மீண்டும் தீயணைப்பு நிலையத்தை அடைந்தது. பேரணியின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், சளி, காய்ச்சல் இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என்பன போன்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.