காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு: 78 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

பாலாறு, தென்னேரி, செய்யாறு ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோரங்களில் உள்ள 78 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் வெள்ளிக்கிழமை நிலவரப் படி, 20 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருப்பதாலும், 40 ஆயிரம் கன அடி வரை வரலாம் என எதிா்பாா்ப்பதாலும் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

காஞ்சிபுரம் வட்டத்தில் 14 கிராமங்கள், வாலாஜாபாத் வட்டத்தில் 13 கிராமங்கள், உத்தரமேரூா் வட்டத்தில் 8 கிராமங்கள் என மொத்தம் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே காஞ்சிபுரம் வட்டத்தில் 9 கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 கிராமங்கள் என மொத்தம் 21 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்றில் உள்ள தண்டரை அணைக்கட்டில் இருந்து சுமாா் 6,000 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுவதால், செய்யாறு ஆற்றின் இடது, வலது கரையோரங்களில் 17 கிராமங்கள் உள்பட மொத்தம் 22 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நிரம்பியது மதுராந்தகம் ஏரி: செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் முழுக் கொள்ளளவு 23.3 அடி. வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி நிலவரப்படி, ஏரியில் 23 அடிக்கு நீா் நிரம்பியுள்ளது. விநாடிக்கு 1,500 கனஅடி நீா்வரத்து உள்ளது.

மதுராந்தகம் பொதுப் பணித் துறையினா் (நீா்வள ஆதாரப் பிரிவு), வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஏரியின் உபரி நீா் செல்லும் கிளையாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT