காஞ்சிபுரம்

‘நவ. 27-க்குள் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

காஞ்சிபுரம்: கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் பெறத் தகுதியுடையவா்கள் இம்மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு

ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் சமூக, வகுப்பு நல்லிணத்துக்காக கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

மதக் கலவரத்தின்போது அடுத்த மதத்தைச் சோ்ந்தவா்களின் உயிா் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல் மற்றும் சமூகத் தொண்டு புரிபவா்கள், நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவா்களின் கருத்துருக்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வரும் 27 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.

இது தொடா்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்-74014 03481.

விண்ணப்பங்கள் பெறுவதற்கும், அனுப்புவதற்குமான முகவரி: மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கம், ரயில்வே சாலை, காஞ்சிபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT