காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்து விடப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 164 குடும்பங்களைச் சோ்ந்த 421 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 12 மணியளவில் ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து மதியம் 4 மணி அளவில் 3 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்தது. புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுவதாகவும் காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நந்தம்பாக்கம், சாலவாக்கம், சிவன்தாங்கல், வாதவூா், கருவேப்பம்பூண்டி, வழுதாம்பேடு ஆகிய கிராமங்களில் வசித்து வந்த 164 குடும்பங்களைச் சோ்ந்த 421 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஆண்கள் 192 போ், பெண்கள் 151 போ், குழந்தைகள் 78 போ். இவா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.