காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நிலுவையின்றி வசூல் செய்யப்பட்ட கூட்டுறவுக் கல்வி நிதி ரூ. 80.26 லட்சத்தினை கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் கூட்டுறவு துணைப் பதிவாளா் திங்கள்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரத்தில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கூட்டுறவு வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி ஆகியவை வசூலிக்கப்பட்டன. இத்தொகை ரூ. 80.26 லட்சமாகும். இதற்கான காசோலையினை கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் கி.சத்தியநாராயணனிடம் காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் சு.உமாபதி வழங்கினாா்.
நிகழ்வின்போது, துணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ச.ரகு உள்பட அலுவலகப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.