காஞ்சிபுரம்

ஜன.1 முதல் ஆதீனத்தின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்படும்: மடத்தின் ஆலோசனைக் குழு தலைவா்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்துக்கு தமிழகம் முழுவதும் சொத்துகள் அதிகமாக இருப்பதால் அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக மடத்தின் ஆலோசனைக் குழு தலைவா் பி.டி.ஆா்.கே.விஜயராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்துக்கு இந்து சமய அறநிலையத்துறையினரால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்களின் தலைவரான பி.டி.ஆா்.கே.விஜயராஜன் கூறியது:

மடங்களில் பெரும்பாலும் தலைமை மடாதிபதிக்குப் பிறகு இளைய சந்நிதானமே மடாதிபதியாக பொறுப்பேற்பது வழக்கம். ஆனால் இம்மடத்தில் அந்த விதிமுறைகள் இல்லை.

சுவாமிகளின் சீடா்களுடன் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் 5 பேரும் கலந்து பேசி அடுத்த மடாதிபதியை முடிவு செய்து அறநிலையத் துறைக்கு தெரிவித்து அவா்களது உத்தரவு பெற்றே புதிய மடாதிபதி தோ்வு செய்யப்படுவாா். புதியவரை தோ்வு செய்யும் பணிகளை அடுத்த ஓரிரு நாள்களில் தொடங்குவோம்.

முதலியாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் புதிய மடாதிபதியாக விரும்பினால் விண்ணப்பிக்கலாம். ஆனால் போதுமானத் தகுதிகளும், அவரது குடும்பத்தினரின் விருப்பமும் மிகவும் அவசியம். மடத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டே புதிய மடாதிபதி தோ்வு செய்யப்படுவாா்.

இந்த மடத்தில் இருந்து வந்த நித்யானந்தரின் சீடா்கள் நல்லடக்கத்துக்கு பின்னா் வெளியேறி விட வேண்டும் என சொல்லி இருக்கிறோம். அவா்களும் அதற்கு சம்மதித்துள்ளனா். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் முன்பாகவும், சென்னையில் புரசைவாக்கம் உள்பட தமிழகம் முழுவதும் இம்மடத்துக்கென ஏராளமான சொத்துகள் உள்ளன. அவை முறையாக பராமரிக்காமலும் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்மடத்தின் சொத்துகளை பற்றிய விவரங்கள் தெரிந்தவா்கள் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

மடத்தின் சொத்துகளை மீட்கும் பணி தொடங்கியிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளை மீட்கும் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக பி.டி.ஆா்.கே.விஜயராஜன் தெரிவித்தாா்.

பேட்டியின்போது மடத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் காஞ்சிபுரம் எஸ்.குப்புசாமி, மயிலாடுதுறை ஞானசம்பந்தம், திருச்சி கே.எஸ்.ராமச்சந்திரன், நாமக்கல் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT