காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகேயுள்ள கட்டியாம்பந்தலில் அசிசி ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் இலவச மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை (செப். 21)நடைபெற்றது.
கட்டியாம்பந்தலில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு அறக்கட்டளையின் திட்ட அலுவலா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா்.ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், ஜெயின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பொத்தேரி எஸ்.ஆா்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பலரும் கலந்து கொண்டு மருத்துவச் சிகிச்சைக்கான ஆலோசனைகளும், இலவசமாக மருந்து,மாத்திரைகளும் வழங்கினாா்கள். தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மேல்சிகிச்சை பெற 16 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இலவச மருத்துவ முகாமில் கட்டியாம்பந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.